விமானம் போல் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதி

கோவை அவினாசி சாலையில் அதிகாலை நேரங்களில் விமானம் போல அதிவேகமாகச் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை, ஜனவரி 19

கோவை அவினாசி சாலையில் அதிகாலை நேரங்களில் விமானம் போல அதிவேகமாகச் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலிருந்து சென்னை, திருச்சி, தூத்துக்குடி, நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் மாவட்டங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பட்டதாரி இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கோவையில் இருந்து தொழில் தொடர்பாகவும், வேலை நிமித்தமாகவும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று வரவும் இந்த ஆம்னி பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

கோவை கணபதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் செல்ல அவினாசி சாலை வழியாக இந்த பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன. அதிகாலை நேரங்களில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் அவினாசி சாலையில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ள இந்த சாலை ஓரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் விமானம் போல வேகமாக இச்சாலையில் செல்வதாக புகார் கூறும் மக்கள் சில சமயங்களில் சாலையைக் கடக்கவே உயிர் பயம் வருகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்களில் ஒருவர் கூறுகையில்:- "அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இச்சாலையில் வாகனங்கள் குறைவாக தான் இயங்கும். இதனால் கோவை மாநகரத்திலுள்ள பெரும்பாலான மக்கள் இச்சாலை ஓரத்தை நடைபயிற்சிக்கு பயன்படுத்துகிறார்கள். அதிக சத்தத்துடன், கண் கூசும் வகையில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தியவாறு ஆம்னி பேருந்துகள் மிகவும் வேகமாகச் செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே சாலையோரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. காவல்துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில்:- "ஆம்னி பேருந்துகளின் வேகத்தை கண்காணித்து அதனை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இருநாட்களாக மேற்கொண்ட சோதனையில் 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

அதேபோல் முகப்பு விளக்குகளில் அதிக வெளிச்சம் வராமல் இருக்க ஸ்டிக்கர் ஒட்டும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...