மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ஜன.21-யில் துவக்கம்

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதியன்று புலியாகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 19

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் வரும் ஜனவரி 21-ஆம் தேதியன்று புலியாகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

கோவை சிலம்பாலையா அமைப்பு சார்பில் மகாகுரு சுழற்கோப்பைக்கான 5-ம் ஆண்டு சிலம்பாட்டப் போட்டிகள் வரும் 21-ம் தேதி புலியகுளம் காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இவ்வமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

இப்போட்டிகளில் மினி சப்-ஜூனியர் (6 வயதிற்குக் கீழ்) சப்-ஜூனியர் (14 வயதிற்குக் கீழ்), ஜூனியர் (17 வயதிற்குக் கீழ்) மற்றும் சூப்பர் சீனியர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

கோவையில் பத்திற்கும் மேற்பட்ட சிலம்பாட்டக் குழுவினர் உள்ளனர். குழு போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் புலியகுளத்தில் உள்ள காவல் சிறுவர் சிறுமியர் மன்றத்தில் அல்லது 9443118510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், 250 முதல் 300-க்கும் மேற்பட்டோர் இந்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் அன்று மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறும். பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...