மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி 18

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அகரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்ககோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த ஊர்கள் இடம்பெறவில்லை எனக் கூறினார். இதனைத்தொடர்ந்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்து, 2018-ல் அரசாணை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு நடத்தியது தவறு இல்லையா..?. இது சட்டவிரோதம் ஆகாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விளக்கம் அரசு தரப்பில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில், 2018-ல் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஜன.,12 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...