போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் குழந்தைகளை மீட்டெடுப்பது குறித்த பயிற்சிப் பட்டறை கோவையில் துவக்கம்

குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது குறித்தும், அவர்களை மீட்டெடுப்பது குறித்தும் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை துவங்கப்பட்டுள்ளது.


கோவை, ஜனவரி 18

குழந்தைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது குறித்தும், அவர்களை மீட்டெடுப்பது குறித்தும் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை துவங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் போதைப் பொருட்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது குறித்தான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை நேற்று (ஜன. 17) இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் துவங்கியது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து மனநல ஆலோசகர்கள் பங்கேற்று குழந்தைகளின் மனநிலை மற்றும் போதையில் அடிமையாதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியினை இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் மேலாண்மை நிறுவனர் சரசுவதி கண்ணையன் துவக்கி வைத்தார்.

கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை போதைப் பொருட்களால் குழந்தைகள் அடிமையாகுவது 5 முறை அதிகரித்துள்ளது என பாராளுமன்றம் சார்பில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த காலகட்டத்தில் 105,173 டான்சின் என்னும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...