ஜம்மூ - காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர் வீரமரணம் - பதிலடியில் 4 பாக்., வீரர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

ஜனவரி 18

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் மற்றும் கிராமமக்கள் படுகாயமடைந்தனர். 

இந்நிலையில், வீரமரணம் அடைந்தவர் பிஎஸ்எப் 78-வது பட்டாலியனில் பணிபுரிந்த தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பண்டார செட்டிபட்டியை சேர்ந்த ஏ.சுரேஷ் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 1976 ல் பிறந்த அவர், 1995ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். அவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவரது உடல் ராணுவ நடைமுறைகளுக்குப் பிறகு தமிழகம் கொண்டு வரப்பட இருக்கிறது. 

இதைத்தொடர்ந்து, அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் நிலைகளை நோக்கி கடுமையாக தாக்கத் துவங்கினர். இதில் 3 முதல் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 நிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக பிஎஸ்எப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சியால்கோட் பகுதியில் பலத்தசேதம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...