வீரமணியின் தலைக்கு பரிசு அறிவித்த சக்திசேனா இந்துமக்கள் இயக்கத் தலைவர் : நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர்.

கோவை, ஜனவரி 17

வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர். 



திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அண்மையில் இராமாயணத்தையும், பகவத்கீதையையும், தீயிலிட்டு எரிப்பதற்கு நாள் குறிப்போம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. வீரமணியின் அறிக்கையை தொடர்ந்து, அவரது தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று சக்திசேனா இந்து மக்கள் இயக்கதின் நிறுவனத்தலைவர் அன்புமாரி துண்டறிக்கை மற்றும் போஸ்டர் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், அன்புமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே இந்து தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் அன்புமாரி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத தைரியத்தில், தற்போது மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...