வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர்.
கோவை, ஜனவரி 17
வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அண்மையில் இராமாயணத்தையும், பகவத்கீதையையும், தீயிலிட்டு எரிப்பதற்கு நாள் குறிப்போம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. வீரமணியின் அறிக்கையை தொடர்ந்து, அவரது தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று சக்திசேனா இந்து மக்கள் இயக்கதின் நிறுவனத்தலைவர் அன்புமாரி துண்டறிக்கை மற்றும் போஸ்டர் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், அன்புமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே இந்து தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் அன்புமாரி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத தைரியத்தில், தற்போது மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அண்மையில் இராமாயணத்தையும், பகவத்கீதையையும், தீயிலிட்டு எரிப்பதற்கு நாள் குறிப்போம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. வீரமணியின் அறிக்கையை தொடர்ந்து, அவரது தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று சக்திசேனா இந்து மக்கள் இயக்கதின் நிறுவனத்தலைவர் அன்புமாரி துண்டறிக்கை மற்றும் போஸ்டர் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், அன்புமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே இந்து தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் அன்புமாரி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத தைரியத்தில், தற்போது மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.