தனிக்கட்சித் தொடங்கும் முடிவில் ரஜினிக்கு குழப்பம்: உளவுத்துறை அறிக்கை

அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு காரணங்களால் தனிக்கட்சித் தொடங்குவது குறித்த தனது முடிவில் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 17

அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு காரணங்களால் தனிக்கட்சித் தொடங்குவது குறித்த தனது முடிவில் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிக் கட்சித் துவங்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உளவுத் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அத்துறையினர் தகவல்களை சேகரித்து அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ரசிகர்களோடு படம் எடுத்துக் கொள்வதாக ரஜினி அறிவித்ததும், எழுச்சியோடு சென்னைக்கு ரசிகர்கள் திரண்டு வந்தனர். அதை வைத்து ரஜினி தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்தார். ரசிகர்கள் உற்சாகமாயினர். எப்படி அமைப்புகளை துவங்கி, கட்சியை துவங்குவது எனப் புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கட்சித் துவங்கப் போவதாக அறிவித்ததும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் பலரும், தன்னைத் தேடி வருவர் என ரஜினி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரபலமான களப்பணியில் தேர்ந்த அனுபவம் உள்ள யாருமே, ரஜினி தரப்பை அணுகவில்லை. இதனால், ரஜினி தரப்பு உற்சாகம் குன்றி உள்ளது.

தேடி வரும் அனுபவஸ்தர்களை வைத்து கட்சி கட்டமைப்புகளை எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம் என கணக்குப் போட்ட ரஜினியின் எண்ணம் பொய்த்துப் போனதால், அப்செட் ஆகி உள்ளனர். ரஜினி தரப்பினரை அணுகிய சில திராவிட இயக்கத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், அவர்களை அனுமதிக்க ரஜினி விருப்பப்படவில்லை. ரஜினி தரப்பைத் தேடிச் சென்ற அவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

கட்சி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பண பலம் உள்ள ரசிகர்மன்ற ஆட்கள் பெரிய அளவில் இல்லாதது யோசிக்க வைத்திருக்கிறது. கட்சித் துவங்குவதாக அறிவித்த பின்பும், நடிகர் கமல்ஹாசனும் கட்சித் துவங்கப் போவதாகவும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் துவங்கப் போவதாகவும் அறிவித்து இருப்பதும், ரஜினி தரப்பை ஏகத்துக்கும் குழப்பி இருக்கிறது.

ரஜினியும், கமலும் கட்சித் துவங்கினால் திராவிட இயக்கத்தின் மேல் அதிருப்தியில் இருக்கும் வாக்குகளில் பிளவு ஏற்படும் என ரஜினி தரப்பு அச்சப்படுகிறது. அதனால், ரஜினியோடு கமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...