"என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்": கோவையில் பாரத் சேனாவைச் சேர்ந்த பெண் பிரமுகர் பரபரப்பு புகார்

வாலிபர்கள் சிலர் தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக நடந்து கொள்வதாக கூறி பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த பெண் பிரமுகர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

கோவை, ஜனவரி 17

வாலிபர்கள் சிலர் தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக நடந்து கொள்வதாக கூறி பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த பெண் பிரமுகர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.



கோவை சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. அதே பகுதியில் மணிகண்டன் டிரேடர்ஸ் என்ற பெயரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் 'இந்து அமைப்பில் இருந்து கொண்டு அராஜகம் செய்த பெண்மணி' என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், சரஸ்வதி சில வாலிபர்களுடன் சண்டையிடுவதைப் போன்ற காட்சிகள் இருந்தது.

இந்த நிலையில், தன்னைப்பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சரஸ்வதி இன்று காலை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் கடந்த 20 ஆண்டுகளாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அந்த பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் சிலர் எண்ணிடம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு வாடகைக்கு சென்று வந்தார்கள். காலப்போக்கில் அவர்களது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், நானே சொந்தமாக ஆட்டோ வாங்கினேன். இதனால், கோபம் கொண்ட அவர்கள் என்னை பழி வாங்க நினைத்தனர்.

தினமும் மது அருந்திவிட்டு எனது கடை முன் பாட்டில்களை அடுக்கிவிட்டு செல்கின்றனர். இதை தட்டிக்கேட்ட என்னையும், எனது கணவரையும் தாக்கினர்.

இந்த சம்பவத்தின் போது, நான் கோபம் கொண்டு அவர்களிடம் சண்டையிட்டதை மட்டும் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். தொடந்து இதேபோல் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...