டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி விடுதியில் திருப்பூர் மாணவர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஜனவரி 17

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி திருப்பூரில் டையிங் மில் வைத்து தொழில் நடத்தி வருகிறார். செல்வமணி - கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் சரத்பிரபு. இவர் கோவை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2015-ம் ஆண்டு முடித்தார். அதன்பின் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.டி. பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது பெற்றோருடன் பேசிய அவர் இன்று காலை அவரது அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் காலை 8 மணிக்கு சரத்பிரபு தந்தையை அழைத்து, மகனை மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டாதாக தெரிவித்தனர் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளனர்.



கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸில் மேற்படிப்பு பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எய்ம்ஸின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் பயின்று வந்த மற்றொரு மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...