கோவையில் களைக்கட்டிய தமிழர் திருவிழா

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.


கோவை, ஜனவரி 15

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, பீளமேடு பகுதியில் நயம் அமைப்பு சார்பில் தமிழர் திருவிழா என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உறியடித்தல், இளவட்டக் கல் தூக்குதல், வழுக்குமரம், பானையில் தண்ணீர் சுமந்து செல்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், குழந்தைகள் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் உற்சாகமாகப் பயணம் செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகளும் பொதுமக்கள் பார்வைக்கு வரவழைக்கப்பட்டு இருந்தன.



கிராமங்களில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை நகரத்தில் முதல் முறையாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளம் தலைமுறையினரும் நமது கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இக்கலைகள் அழியாமல் இருக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

இந்ந நிகழ்ச்சியில் இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டு இருப்பதாகவும், பொதுமக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கங்கா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...