ஆண்டாள் சர்ச்சை கருத்து விவகாரம் : வைரமுத்துக்கு எதிராக வைணவர்கள் போராட்டம்

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை, ஜனவரி 13

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பெரியகடை வீதியில உள்ள வேணுகோபால் சாமி கோவில் முன்பாக  ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக   கூறி இன்று காலை  வைணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி மடத்தின் 24 வது பட்ட  சடகோப ராமனுஜ ஜீயர் கலந்து கொண்டார். கோவில் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில கண்டன ஆர்ப்பாட்டத்தில்  50-க்கும் மேற்பட்டோர் வைணவர்களும், ஆண்டாள் பக்தர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்  போது பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து வரும் செவ்வாய் கிழமைக்குள் மன்னிப்பு கேட்கவில்லை எனில் புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக  தெரிவித்தார். மேலும் செவ்வாய்கிழமைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்து கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், உலகம் முழுவதும் உள்ள இந்துகள் சேர்ந்து குரல் கொடுத்து கவிஞர் வைரமுத்துவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவைப்போம் எனவும் ஜீயர் தெரிவித்தார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன்  உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பங்கேற்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...