கோவை மாநகர போலீசாருக்கு ”பாடி ஒன் கேமிரா” வழங்கத் திட்டம்: போக்குவரத்து துணை ஆணையர்

தேவைப்பட்டால் ”பாடி ஒன் கேமிரா” கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்படும் என கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 13

தேவைப்பட்டால் ”பாடி ஒன் கேமிரா” கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்படும் என கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போலீசாரின் வழக்கமான பணி. அவ்வாறு அதிக தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய சூழலில், ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசாரின் கைகளில் லஞ்சமாகத் திணித்து 'எஸ்கேப்' ஆவதும் சிலரின் வழக்கமான குணம் தான். இந்த சூழலில், போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியின் போது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காணவும் கேரள மாநில போலீசாருக்கு 'பாடி ஒன் கேமிரா' (Body Worn Camera) வழங்கப்பட்டது.

அளவில் சிறியதாக இருக்கும் இந்தக் கேமிரா போலீசாரின் சீருடையில் பொருத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பதிவாகும் காட்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு அனுப்பப்படும். அந்தந்தக் காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவிறக்கம் செய்யாமல் கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரால் அழிக்க முடியாது. போலீசாரை கண்காணிக்கும் இந்தத் திட்டம் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தமிழகத்திலும் இதுபோன்ற கேமிராக்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், மாநிலத்தின் 12 மாநகராட்சிகளுக்கு 'டிரையல்' அடிப்படையில் 'பாடி ஒன் கேமிரா'க்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இந்த கேமிராக்கள் உபயோகிக்கப்படாத நிலையில் நெல்லை மாவட்ட போலீசார் 'பாடி ஒன் கேமிரா'வை உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர். 

கோவை மாநகர போலீசாருக்கும் இந்த கேமிராக்கள் வழங்கப்படுமா? என்ற கேள்வியை மாநகர காவல்துறையிடம் முன்வைக்கப்பட்டது.



இதற்கு பதிலளித்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில், "கோவையில் இதுபோன்ற ஒரு கேமிரா உள்ளது. அந்த கேமிரா தற்போது 'டிரையல்'லில் (Trial) உள்ளது. இந்த கேமிரா தேவை என்றால் 'பாடி ஒன் கேமிரா' வரவழைக்கப்பட்டு மாநகரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்" என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...