சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை: ப. சிதம்பரம் ஆவேசம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 13

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் விசாரிக்க முடியாது. சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. சோதனை நடைபெறும் என நேற்றே எதிர்பார்த்தேன். இந்த வழக்கில் இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. 

தில்லியில் உள்ள எனது வீட்டில் தேவையில்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு கார்த்தி வசிக்கவில்லை. சென்னை, தில்லி வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. படுக்கையறை, சமையலறையில் சோதனை நடத்தினர். இதுவரை 3 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம். நாடாளுமன்றத்தில் நான் அளித்த விளக்கம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...