கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை, ஜனவரி 12
கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018” வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது இன்றுடன் நிறைவடைந்தது. சுமார் ஒருவாரமாக நடைபெற்ற இந்த விழாவை பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவை மக்கள் இணைந்து விதவிதமாக கொண்டாடினர். குறிப்பாக, நமது கலை மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் சுமார் 140-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”சிலம்ப சங்கமம்” என்ற சிலம்பாட்ட நிகழ்ச்சி, கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். சுழற்வாள், கேடயம் சண்டை, ரிப்பன் சிலம்பம் மற்றும் தீ சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளையொட்டி நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018” வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது இன்றுடன் நிறைவடைந்தது. சுமார் ஒருவாரமாக நடைபெற்ற இந்த விழாவை பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவை மக்கள் இணைந்து விதவிதமாக கொண்டாடினர். குறிப்பாக, நமது கலை மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் சுமார் 140-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”சிலம்ப சங்கமம்” என்ற சிலம்பாட்ட நிகழ்ச்சி, கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். சுழற்வாள், கேடயம் சண்டை, ரிப்பன் சிலம்பம் மற்றும் தீ சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.