மாணவர் தற்கொலை விவகாரம்: ஆசிரியரிடம் முறையாக விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை

கோவை, ஜனவரி 12

கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் முறையாக விசாரணை நடத்தக்கோரி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 



ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரின் மதியம் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை பள்ளியின் உதவியாளர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜாபரை வீட்டுக்கு அழைத்து வந்த உதவியாளரிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்ற விவரத்தை மாணவரின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதற்கு பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது. இந்த இடைவெளியில் வீட்டிற்குள் புகுந்த ஜாபர், கதவை தாழிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜாபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், மாணவர் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஜாபரின் உறவினர்கள் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையரிடம் இதுகுறித்த மனுவினையும் அளித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...