தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை, ஜனவரி 11
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முறையான அனுபவமற்ற இவர்களால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக ஓட்டுநராக அவதாரம் எடுத்துள்ளார் கோவையின் தேர்தல் நாயகன்.
மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தற்காலிக ஓட்டுநராகச் சேவை செய்வதாகக் கூறுகிறார் அந்த ஓட்டுநர் நூர் முகம்மது.

கோவை தேர்தல் களங்களில் நூர் முகம்மது-விற்கு தனி இடம் உண்டு. பெரிய அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு இல்லையென்றாலும், தனி மனிதராக அவரது பகுதிகளில் முடிந்தளவுக்கு கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடந்த தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு தோற்று இருந்தாலும், ஒவ்வொரு முறையும் தேர்தல் களத்தில் மனு தாக்கல் செய்யும் போது மாட்டு வண்டி, ராஜா வேஷம் போன்ற பல கெட்டப்புகளில் வந்து மக்களை கவர்வதில் வல்லவர் இவர்.
பல முறை சாதனைக்காக தேர்தல்களில் நின்று இருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. ஆனால், முதன் முறையாக மக்களின் மனதை வென்றிருக்கிறார்., தற்காலிக ஓட்டுநராக..!
அரசுப் பேருந்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் மன்னன் நூர் முகம்மது தற்காலிக ஓட்டுநராக ரயில் நிலையத்திலிருந்து, கணுவாய் வரை '11' எண் கொண்ட பேருந்தை கடந்த நான்கு நாட்களாக ஓட்டி வருகிறார்.
இது குறித்து அவர் நம் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேருந்து இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் பணி செய்பவர்கள் சுக, துக்கத்தைக் கடந்து பணிபுரிகின்றனர். அரசோடு இணைந்து மக்கள் செய்யும் பணியே மக்களாட்சி. மக்களுக்கான சேவையே மானிடத்தில் அளப்பரியது. மக்களுக்கு சேவை செய்யவே பேருந்து ஓட்டுகிறேன். இதன் மூலம் வரும் ஊதியப் பணத்தை ஆதரவற்றோருக்கு வழங்க உள்ளேன்" என்றார்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முறையான அனுபவமற்ற இவர்களால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக ஓட்டுநராக அவதாரம் எடுத்துள்ளார் கோவையின் தேர்தல் நாயகன்.
மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தற்காலிக ஓட்டுநராகச் சேவை செய்வதாகக் கூறுகிறார் அந்த ஓட்டுநர் நூர் முகம்மது.

கோவை தேர்தல் களங்களில் நூர் முகம்மது-விற்கு தனி இடம் உண்டு. பெரிய அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு இல்லையென்றாலும், தனி மனிதராக அவரது பகுதிகளில் முடிந்தளவுக்கு கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடந்த தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு தோற்று இருந்தாலும், ஒவ்வொரு முறையும் தேர்தல் களத்தில் மனு தாக்கல் செய்யும் போது மாட்டு வண்டி, ராஜா வேஷம் போன்ற பல கெட்டப்புகளில் வந்து மக்களை கவர்வதில் வல்லவர் இவர்.
பல முறை சாதனைக்காக தேர்தல்களில் நின்று இருந்தாலும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. ஆனால், முதன் முறையாக மக்களின் மனதை வென்றிருக்கிறார்., தற்காலிக ஓட்டுநராக..!
அரசுப் பேருந்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் மன்னன் நூர் முகம்மது தற்காலிக ஓட்டுநராக ரயில் நிலையத்திலிருந்து, கணுவாய் வரை '11' எண் கொண்ட பேருந்தை கடந்த நான்கு நாட்களாக ஓட்டி வருகிறார்.
இது குறித்து அவர் நம் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேருந்து இல்லாமல் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் பணி செய்பவர்கள் சுக, துக்கத்தைக் கடந்து பணிபுரிகின்றனர். அரசோடு இணைந்து மக்கள் செய்யும் பணியே மக்களாட்சி. மக்களுக்கான சேவையே மானிடத்தில் அளப்பரியது. மக்களுக்கு சேவை செய்யவே பேருந்து ஓட்டுகிறேன். இதன் மூலம் வரும் ஊதியப் பணத்தை ஆதரவற்றோருக்கு வழங்க உள்ளேன்" என்றார்.