நாடு முழுவதும் உள்ள ரயில்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 10
நாடு முழுவதும் உள்ள ரயில்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நாடு முழுவதும் அனைத்து மண்டல ரயில்நிலையங்களில், பாதுகாப்பை அதிகரிப்பதே முதன்மையாக நோக்கம் என்றார். ரயில்வே நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பியூஷ் கோயல், தொழில்நுட்பத்தின் மூலம் ரயில்வேத் துறை செயல்பாடுகளில், பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இதற்காக, ரயில் நிலையங்களில் நிகழும் நடவடிக்கைகளை நிகழ் ஒளிபரப்பைக் கண்காணிக்கும் வகையில், பறக்கும் கேமராக்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்புகளையும் தொழில்நுட்பம் முறையில் மாற்றப்படும். என்றார்.
மீட்புப் பணிகள், திட்டக் கண்காணிப்பு, ரயில்தண்டவாளங்கள் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில்களை ”பறக்கும் கேமராக்கள்” மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நாடு முழுவதும் அனைத்து மண்டல ரயில்நிலையங்களில், பாதுகாப்பை அதிகரிப்பதே முதன்மையாக நோக்கம் என்றார். ரயில்வே நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பியூஷ் கோயல், தொழில்நுட்பத்தின் மூலம் ரயில்வேத் துறை செயல்பாடுகளில், பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இதற்காக, ரயில் நிலையங்களில் நிகழும் நடவடிக்கைகளை நிகழ் ஒளிபரப்பைக் கண்காணிக்கும் வகையில், பறக்கும் கேமராக்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்புகளையும் தொழில்நுட்பம் முறையில் மாற்றப்படும். என்றார்.
மீட்புப் பணிகள், திட்டக் கண்காணிப்பு, ரயில்தண்டவாளங்கள் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.