கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந் கட்டாரியா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.
கோவை, ஜனவரி 11
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந் கட்டாரியா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், காவல் துறை ஆணையர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன், போக்குவரத்துத் துறை துணை ஆணையர் சுஜித்குமார், பயிற்சி ஆட்சியர் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்து நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2015- 16ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016- 17ல் 1061 சாலை விபத்துகளால் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5369 விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், விதி மீறலில் ஈடுபட்டவர்கள் என 1,56,694 பேர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந் கட்டாரியா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், காவல் துறை ஆணையர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன், போக்குவரத்துத் துறை துணை ஆணையர் சுஜித்குமார், பயிற்சி ஆட்சியர் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்து நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2015- 16ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016- 17ல் 1061 சாலை விபத்துகளால் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 5369 விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், விதி மீறலில் ஈடுபட்டவர்கள் என 1,56,694 பேர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.