கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து​ 17 பவுன் நகை கொள்ளை

கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்



கோவை, ஜனவரி 11

கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

செல்வபுரம் தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமாயி அம்மாள் (75). இந்தத் தம்பதிக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, சின்னசாமி இறந்து விட்டதால் ராமாயி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது ராமாயி அம்மாள் உயிரிழந்திரப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது காது, மூக்கு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டின் பீரோவில் இருந்த 17 பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...