போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு : போராட்டம் நீட்டிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது


கோவை, ஜனவரி 10

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ந்தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்தினால் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு, அதனால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.  ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுபற்றிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இடைக்காலமாக 2.44 ஊதிய உயர்வு வழங்கப்படும் எனக் கூறினார்.

பொங்கல் பண்டிகை வருவதால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என நீதிபதிகளும் கூறியுள்ளனர். ஆனால், அரசின் உத்தரவாதத்தினை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்து உள்ளன. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சு நடத்த அரசு விரும்புகிறதா? இல்லையா? என்றும் தொ.மு.ச. கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும் எனத் தெரிகிறது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...