தூய்மைப் பணி, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலியுடன் கோவை விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும், 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கோவை, ஜனவரி 10

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும், 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 6-வது நாளான நேற்று (ஜன. 9), கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் தூய்மைப்பணி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கலந்துக்கொண்டு தூய்மைப் பணியை தொடங்கி வைத்துப் பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், கோவை நமது ஊர். இதை நாம் தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால்தான் எந்தவித நோய் பாதிப்பும் இன்றி, ஆரோக்கியமாக வாழ முடியும்.

கோவை விழாவின் ஒருபகுதியாக யங் இந்தியன்ஸ் அமைப்பினர் பேருந்து நிலையங்களைத் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குறியது. கோவையை தூய்மையாக வைத்துக்கொள்ள இதுபோன்ற அமைப்புகளின் முயற்சிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தூய்மைப்பணி குறித்து யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரசன்னா, துணைத்தலைவர் விஷ்ணு ஆகியோர் கூறுகையில், கோவை விழாவின் ஒரு பகுதியாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 11ம் தேதியன்று உக்கடம் பேருந்து நிலையத்தில் இப்பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து ரயில் நிலைய சாலையில் தூய்மைப்பணி நடைபெற உள்ளது. பேருந்து நிலையங்களில் 50 குப்பைக்கூடைகள் வைக்கப்படும். இங்கு வரும் பொதுமக்கள் குப்பைகளை அந்தக்கூடைகளில் வீசி, பேருந்து நிலையத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கோவையை தூய்மையாக வைத்துக்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.



குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு:-

அதைத்தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போக்குவரத்துத் துணைக் காவல் ஆணையர் சுஜித்குமார் கலந்துகொண்டு, பலூன்கள் பறக்கவிட்டு, மனிதச்சங்கிலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டாக்டர் பிரியதர்ஷினி, துணைத் தலைவர் நிவேதா, யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரச்சன்னா, துணைத் தலைவர் திபேந்தர் சிங் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...