கோவில் உண்டியலை உடைத்து ரூ. 45 ஆயிரம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர், ஜனவரி 10

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் வெகு விமர்சையாக திருவிழா நடத்துவது வழக்கம். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடப்பதற்கு முன்பாக எண்ணப்படுவது வழக்கம்.



இந்நிலையில், இன்று (ஜன. 10) காலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், கோவிலின் பின்புற சுவற்றின் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வேலால் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 45 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...