7-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 10

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் 10 தொழிற்சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பேருந்து தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றம் மீண்டும், மீண்டும் அறிவுறுத்தி வருகின்றன. 

பேருந்து தொழிலாளர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஸ்டிரைக்கை தொடர அவர்கள் முடிவு செய்தனர். இதனால் பேருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. முதலில் பணிக்கு வராமல் புறக்கணித்த பேருந்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து டெப்போக்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பேருந்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பேருந்து தொழிலாளர்கள் அடுத்தடுத்து தினமும் ஆர்ப்பாட்டத்தை தொடர்வதால் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பேருந்துகள் ஓடாததால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், வெளியூர் செல்பவர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் என அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்துகள் இல்லாததால் ரயில், கார், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். 

பேருந்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் விதித்த கெடு நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வரை சுமார் 60 ஆயிரம் பேருந்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது, சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கூறி அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறி உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...