கோவை, ஜனவரி 9
2.57 சதவிகித ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிஐடியு, திமுக, தொமுச உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று 6-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இதனிடையே, தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் தொமுச பேரவைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், ஜனவரி 11ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
2.57 சதவிகித ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிஐடியு, திமுக, தொமுச உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று 6-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இதனிடையே, தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் தொமுச பேரவைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், ஜனவரி 11ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.