உடல்பருமனுள்ள குழந்தைகளை கிண்டலடிக்கக்கூடாது : மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுரை

உடல் பருமனாக இருப்பவர்களை விமர்சிக்கவோ, கிண்டலடிக்கவோ கூடாது என பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 09

உடல் பருமனாக இருப்பவர்களை விமர்சிக்கவோ, கிண்டலடிக்கவோ கூடாது என பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். 



இளம் தலைமுறைகளிடையே உடல் பருமனைத் தடுக்கும் வகையில், யங் இண்டியன்ஸ் மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து ”பள்ளிக் குழந்தைகளின் பருமன் தடுப்பு” (COPS) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஆர்க் பவுண்டேஷன் மற்றும் கோவை மாநகராட்சி முழு ஆதரவை அளித்துள்ளனர். 

இந்த நிலையில், ”கோவை விழா 2018”-ஐ யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் கோவை வந்த நடிகர் சிவகார்த்திகேயன், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், ” மாணவர்கள் ஜங் உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நான் குளிர்பானத்தை குடிப்பதை விட்டு 7 அல்லது 8 ஆண்டுகள் ஆகின்றன. குளிர்பானத்தின் நன்மை, தீமை தெரியாததால், அது தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்தேன். என்றார். 

இதைத் தொடர்ந்து, உடல்பருமனுக்கு எதிரான உறுதிமொழியை நடிகர் சிவகார்த்திகேயனுடன் 5,000 மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். 



” மாணவர்கள் நலமான வாழ்க்கை முறை வாழவேண்டும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” எனக் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறினார். 

நிகழ்ச்சியின் இறுதியில், வாழ்க்கை முறை குறித்த ’Unsung Heroes’ என்ற காலாண்டர் வெளியிடப்பட்டது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...