நீலகிரி, ஜனவரி 09
குடியரசு தின விழாவையொட்டி, நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் (தெற்கு) கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலிங்கம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியரசு தின விழாவையொட்டி, நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் (தெற்கு) கலாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலிங்கம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்