கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக சகோதரி மகளைக் கொலை செய்த சகோதரன்!

சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை, ஜனவரி 9

சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அடுத்த நீலிக்கோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (54). இவரது சகோதரி பாக்கியம் (74). பாக்கியத்தின் மகள் சாந்தி. மணிகண்டன் தனது சகோதரி பாக்கியத்துடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் நடத்த பாக்கியத்திடம் மணிகண்டன் 4 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்தை பாக்கியம் தனது சகோதரனிடம் கேட்டுள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக பணம் தர முடியாத சூழலில் நேற்று (திங்களன்று) இரவு மணிகண்டன் தேனில் விஷம் கலந்து பாக்கியம், அவரது மகள் சாந்தி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், அவரும், சாந்தியும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்திற்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழில் நஷ்டம் காரணமாக தனது சகோதரி மகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...