திரையரங்கில் தேசியகீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி மத்திய அரசு மனு

கோவை, ஜனவரி 08

திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.

திரையரங்கில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என கடந்த 2016ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. தேசிய கீதத்தை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பல்வேறு இடங்களில் தேசிய கீதம் இசைப்பது குறித்து வரையறை செய்ய அமைச்சரவையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு வரையறை அமைக்க குறைந்தபட்சம் 6 மாத காலம் அவகாசம் தேவைப்படுகிறது. வரையறை தயாரானவுடன் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிடும். அதுவரையில் திரையரங்கில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்கிற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...