கோவையில் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 6 வாலிபர்கள் கைது

தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, ஜனவரி 08

தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையது அகமது. இவரையும், இவரின் வகுப்பு தோழர்களான சர்ஜூன், அபிலாஷ், நிஷாஸ் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய 5 பேரையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்று, ஆள் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்குதல் நடத்தியது.  அவர்களிடம் பணம் இல்லாததால், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு விரட்டிய அந்த கும்பல் தலைமறைவாகியது. 

இது தொடர்பாக, உக்கடம் காவல்நிலையத்தில் சையது அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முஜிபர் ரகுமான், ரியாசுதீன், பங்கடி பரூக், சையது இப்ராகிம், மணிகண்டன் மற்றும்  பவுருதீன் ஆகிய 6 வாலிபர்கள் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியதில் கோவையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. 

இவர்கள் ஆறு பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஆட்கடத்தல், பணம் பறிப்பு போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...