ஐ லீக் கால்பந்து போட்டி : நெரோகா அணியோடு நாளை சென்னை பலப்பரீட்சை

கோவை, ஜனவரி 08

ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது 9-வது லீக் ஆட்டத்தில் நெரோகா அணியை நாளை சந்திக்கிறது. 

இது தொடர்பாக நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் கூறுகையில், இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி, 2 வெற்றி, 2 சமன், 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளோடு சென்னை அணி உள்ளது. நாளை நடக்கும் மலின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் வீரர்கள் விளையாடுவார்கள். அந்தப் போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில், சூப்பர் 4 லீக் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறும். இவ்வாறு அவர் கூறினார். 

இதைத் தொடர்ந்து பேசிய ஸ்லோவேக்கியா வீரரும், சென்னை அணியின் கோல்கீப்பருமான ஒய்ரோஸ் கூறுகையில், கடந்தமுறை நேரு விளையாட்டரங்கில் விளையாடும்போது, சர்வதேச தரத்தில் மைதானம் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது.  தற்போது, ஓரளவுக்கு மைதானம் தயார் செய்யப்பட்டு, விளையாடத் தகுதி பெற்றுள்ளது. பல்வேறு மாநிலங்களில் போட்டிகள் நடைபெறுவதால், போக்குவரத்து தூரமும், போட்டிக்கான இடைவெளி நேரமும் இல்லாதது, வீரர்களை சோர்வடையச் செய்கிறது. 

ஐரோப்பா கண்டத்தில் விளையாடுவதை ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது கோடையின் தாக்கல் அதிகம் உள்ளதை உணர்கிறேன். என்றார். 

கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, இந்தியாவின் பழமையான, பலம் வாய்ந்த அணியான மோகன் பகன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கும் நெரோகா அணிக்கு எதிரான 9-வது லீக் ஆட்டத்திலும், சென்னையின் வெற்றி ஆதிக்கம் தொடரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...