கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களுக்கு 25,000 பேனாக்களை வழங்கிய ஜிஎம் பென்ஸ் நிறுவனம்

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது


கோவை, ஜனவரி 08

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது

நாடு முழுவதும் 1949-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, நன்கொடைகள் பெறப்பட்டு, அதன்மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள், தியாகிகளின் வாரிசுகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடிநாளையொட்டி நன்கொடை பெறுவதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவித்து வருகிறார்.

தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது. இதற்கான, காசோலையை, ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் இந்திரக்குமார் மகேந்திரன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...