மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு நிதியுதவி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார்.

கோவை, ஜனவரி 8

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் பலியான 4 குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டிற்கான மாவட்டம் மற்றும் வட்டார அளவில் சுத்தம், சுகாதாரம் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டியிலும் 4 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு தொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டியானது பள்ளி அளவிலும் வட்டார அளவிலும் நடத்தப்பட்டு போட்டிக்கு மூன்று பேர் வீதம் என வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.1500 ரூ.1300 மற்றும் ரூ.1100 பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் நிவாராண நிதியிலிருந்து விபத்தில் மரணமடைந்த 2 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும், மேலும் 2 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ. 8 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் சரண்யா ஹரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பி.அய்யண்ணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) சி.கிருஸ்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...