82-வது வார்டில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி மாவட்ட ஆட்சிரிடம் மனு

கோவை மாநகராட்சியின் 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 8

கோவை மாநகராட்சியின் 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82-வது வார்டு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, அந்த வார்டின் மையப்பகுதியான கோட்டைமேடு, வின்சென்ட் ரோடு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, முறையான கழிப்பறை வசதியில்லாமல் பொதுமக்கள், திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இந்த மனு குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் கழிப்பறை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 82-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்கக்கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

”மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கழிவறைகள் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாவட்டத்தில் சிறந்த மாநகராட்சி என்ற பெருமையை பெற்ற கோவை மாநகராட்சியில், இந்த நிலை இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொண்டு கழிப்பறையை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...