வீட்டு மனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வின்சென்ட் ரோடு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே வசித்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 8

வின்சென்ட் ரோடு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே வசித்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.



கோவை, வின்சென்ட் ரோடு பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2007-ம் ஆண்டு இடிந்து விழுந்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு 356 வீடுகளில் வசித்து வந்தவர்கள் காலி செய்யப்பட்டு மீதம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.



இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு புது குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு வசித்து வந்தவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு அருகில் வசித்தவர்களுக்கும் வீடு வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரிலேயே 192 குடும்பங்கள் வீடுகளை காலி செய்து கொடுத்ததாகக் கூறி சோஷியல் டெமோகிரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அதில், வீடு இல்லாதவர்களுக்கு தமிழக அரசு இலவச வீடுகள் அளித்து வரும் நிலையில் தங்களுக்கு உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள வீடுகளில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...