கந்து வட்டி கேட்டு சிறுவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோவை, ஜனவரி 8

கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா மற்றும் ஹரிஹரன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில், 6 வருடத்திற்கு முன்னர் தனது கணவர் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வாகன உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கினேன். அதனை திரும்ப செலுத்திய போதும் மேலும் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்ப்பந்தித்து வருகிறார். மேலும், பணம் கேட்டு மிரட்டி வரும் மணிகண்டன் குடும்பத்தினர், தனது மகன் ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் துறையினர் மணிகண்டனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். 

எனவே, அதிக கந்து வட்டி கேட்டு மிரட்டும் மண்கண்டன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...