தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறுவது வேடிக்கையாக உள்ளது- கி. வீரமணி

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை, ஜனவரி 8

தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை லட்சுமிமில் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் திராவிடர் கழகத்தின் கோவை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், மத தீவிரவாதம், சாதி வெறி வளர்ந்து வரும் சூழலில் நாத்திகம் தான் மனிதநேயத்தை உருவாக்கும். தமிழ்நாட்டில் மட்டுமே நாத்திகர் இயக்கம் பெரியாரினால் மக்கள் இயக்கமாக உள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசு மண்டல கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றக்கோரியும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்.

ஆன்மீக அரசியல் என்பது சொல்பவர்களுக்கும் புரியாது, கேட்பவர்களுக்கும் புரியாது. ஆன்மீகம் என்பது சாமியார் வேலை. ஆட்சி நடத்துவது அரசியல்வாதிகள் வேலை. இரண்டிற்கும் தொடர்பு இல்லை. அரசியல்வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். நடிகர் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார்களா ?. 

போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும், போக்குவரத்துத் துறையினை தனியார்மயமாக்கலாம் என்ற நீதிமன்ற கருத்து குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு, அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை. நீதிமன்றத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்றார்.

தொடர்ந்து, ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் தயாரிக்கப்பட்டது. தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என ஆளுநர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனைத் தனது ஆய்வுகளில் ஆளுநர் உறுதிப்படுத்தினாரா என கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...