எடப்பாடி அரசு நீடிப்பதை ஆளுநர் அனுமதிப்பது விநோதமாக உள்ளது: ஸ்டாலின்

111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டும் உள்ள நிலையில், அதிமுக அரசு நீடிப்பதை ஆளுநர் அனுமதிப்பது விநோதமாக உள்ளது என சட்டப்பேரவையை வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8

111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டும் உள்ள நிலையில், அதிமுக அரசு நீடிப்பதை ஆளுநர் அனுமதிப்பது விநோதமாக உள்ளது என சட்டப்பேரவையை வெளிநடப்பு செய்த எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் இந்த ஆட்சிக்கு 111 உறுப்பினர்கள்தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது. மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க முறையாக ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கிற உரையை அவர் படிப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்திருக்கிறது. 

அது மட்டுமல்ல, மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆளுநர் ஆய்வு பணி என்ற பெயரில் பல மாவட்டங்களுக்கு சென்று அந்தப் பணிகளில் ஈடுபடுவது என்பது ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் விரோதமாக அமைந்திருக்கிறது. அதை கைகட்டி, வாய் பொத்தி, இந்த மைனாரிட்டி ஆட்சியாக இருக்கிற இந்தக் குதிரை பேர ஆட்சி, வேடிக்கைப் பார்ப்பது மட்டுமல்ல, அதை வரவேற்றுப் பாராட்டிக்கொண்டிருப்பது என்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்று. அதேநேரம், தமிழகத்தில் நிதிநிர்வாகம் முடங்கி போய் இருக்கிறது. தொழில் வளர்ச்சி கடைசி இடத்துக்கு சென்றிருக்கிறது. 

அண்மையில், போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை அழைத்து முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் அவர்களை அழைத்து பேசவில்லை. இதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்”. என்றார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...