கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் சீர்வரிசை

கோவை, ஜனவரி 8

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிக அரசின் சீர்வரிசைகளை வழங்கினார்.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர், செல்வபுரம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, கார்பிணி தாய்மார்களுக்கான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், மகப்பேறு காலங்களில் சத்தான உணவு உண்ணவும், விரும்பியதை பெறவும் ஏழை எளிய பெண்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.18 ஆயிரம் மகப்பேறு கால நிதியுதவி வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சீர்வரிசைகளுடன் சமுதாய வளைகாப்பு விழா, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம், இரு பெண்குழந்தைகள் நிதியுதவித்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு 

செயல்படுத்தி வருகிறது.

அதன்படி தற்போது சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் 5 வகையான சத்தான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்ஜூணன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...