காளை மாட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 8

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து அந்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ந.சக்திவேல் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பண்டை காலத்தில் விவசாய முறைக்கும், கலப்படம் இல்லாத உணவு உற்பத்தி முறைக்கும் நம் நாட்டு மாடுகள் பெரிதும் உதவியுள்ளன. கால்நடைகள் மூலம் வரும் வருவாய் விவசாய வாழ்க்கை முறைக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்த நிலையில் தற்போது நாட்டுமாடுகள் அழியும் தருவாயில் உள்ளது. 

இதனைத் தடுக்க நாட்டு மாடு வளர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வளர்ந்து வரும் இக்காலத்திற்கு தமிழக அரசு நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை புதியதாக உருவாக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் உதவி வழங்கி நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், நாட்டு மாடு வளர்ப்பு மூலம் உற்பத்தியாகும் பால் கொள்முதலும், எதிர்காலத்தில் ஆவின் கொள்முதல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். நகரத்திலும், கிராமப் புறங்களிலும் வீட்டுக்கு ஒரு மாடு வளர்ப்புத் திட்டம் உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, காங்கயம் இன கால்நடைகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...