ஜெ.மரணம் குறித்த விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும் - ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 7

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சசிகலா ஆஜராவாரா என்பதை நீதிமன்றம் நாளை அறிவிக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆணையத்தின் விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவுக்கு வழக்கறிஞர் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு சசிகலா ஆஜராவாரா என்பதை நாளை நீதிமன்றத்தின் அறிவிப்பின் போது தான் தெரியும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றார்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...