கோவையில் இராணுவத் தளவாட உதிரி பாகங்கள் தொழிற்பூங்கா அமைக்க மத்திய அமைச்சரிடம் மாநில அமைச்சர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனை விமானநிலையத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி தமிழக அரசின் சார்பில் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

கோவை, ஜனவரி 7

கோவை மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனை விமானநிலையத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி தமிழக அரசின் சார்பில் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

அப்போது, கோவை மாவட்டத்தில் இராணுவ பாதுகாப்பு தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் செய்யும் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை மனு அளித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

"கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மட்டுமின்றி தொழிற்துறையில் வளர்ச்சி அடைந்த வர்த்தக ரீதியாக முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழக மாநிலத்தின் முக்கிய பங்காகவும் திகழ்கின்றது. கோவையில் ஜவுளி எந்திரங்கள், ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், ஸ்டீல் மற்றும் பம்ப்செட் உற்பத்தி போன்ற தொழில்கள் மிகுந்த அளவில் உள்ளன. மேலும் தங்கம், வைர நகைகள் தயாரிப்பு கோவையில் பிரசிக்தி பெற்றது. தென்னிந்தியாவிற்கே, உயர்கல்விக்கும், மருத்துவக்கல்விக்கும் புகழ்பெற்ற மையமாக கோவை உள்ளது.

இன்றைய தினம் மேம்பட்ட தொழில்நுட்பத்தோடு கூடிய பன்னாட்டு நிறுவனங்களின் வருகை மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசின் சார்பில் தேசிய முதலீடு உற்பத்தி மையம் அமைக்க உதவிடவும், Make in India திட்டம் போலவே Make in Coimbatore என்ற நிலையை உருவாக்கும் வகையில் கோவையில் இராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை வேண்டி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...