கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை, ஜனவரி 7
கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கபிலேஷ் (15). வீரபாண்டிப்பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற கபிலேஷ் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.
இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல மகன் பள்ளிக்குச் சென்றான். எப்போதும் பள்ளி முடிந்த பின் டியூசன் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால், அன்று நெடுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.
பின் பள்ளி மற்றும் டியூசன் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் கபிலேஷ் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனது மகன் குறித்து தகவலறிந்தால் இந்த தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுங்கள் "9786343891" என்றார்.
சிறுவன் மாயமான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கபிலேஷ் (15). வீரபாண்டிப்பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற கபிலேஷ் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.
இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல மகன் பள்ளிக்குச் சென்றான். எப்போதும் பள்ளி முடிந்த பின் டியூசன் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால், அன்று நெடுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.
பின் பள்ளி மற்றும் டியூசன் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் கபிலேஷ் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனது மகன் குறித்து தகவலறிந்தால் இந்த தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுங்கள் "9786343891" என்றார்.
சிறுவன் மாயமான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.