கோவையில் 15 வயது சிறுவன் மாயம்: போலீசார் விசாரணை

கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை, ஜனவரி 7

கோவையில் 10-ம் வகுப்பு பயிலும் சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கபிலேஷ் (15). வீரபாண்டிப்பிரிவு அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்ற கபிலேஷ் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. 

இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல மகன் பள்ளிக்குச் சென்றான். எப்போதும் பள்ளி முடிந்த பின் டியூசன் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால், அன்று நெடுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.

பின் பள்ளி மற்றும் டியூசன் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் கபிலேஷ் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனது மகன் குறித்து தகவலறிந்தால் இந்த தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுங்கள் "9786343891" என்றார்.

சிறுவன் மாயமான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...