துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் வேலுமணி

கோவை, ஜனவரி 06

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி சார்பாக மாநகராட்சி அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு மாநகராட்சியில் பணிபுரியும் 2,657 நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவித்து, முதற்கட்டமாக 50 துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.22,48,932 மதிப்பீட்டில் ஆண், பெண் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள், ரூ.20,93,716 மதிப்பீட்டில் கையுறை, முகவுறை, தொப்பி, ஒளிரும் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ரூ.7,83,315 மதிப்பீட்டில் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய, மஞ்சள் கொத்து மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள், ரூ.7,59,542 மதிப்பீட்டில் சோப்புகள் (12 எண்ணிக்கை - ஒரு நபருக்கு) மற்றும் ரூ.6,43,829 மதிப்பீட்டில் காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார். 

மேலும், அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் அரசு ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் செய்கின்ற பணி கடவுளை விட மேலானது. பணியாளர்கள் பணி செய்யும் போது பாதுகாப்பு உபகரணங்களைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் துப்புரவு பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். என்றார். 

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சியில் பணியிலிருக்கும் போது காலமான 29 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கும், மருத்துவ இயலாமையின் காரணமாக பணி ஓய்வு பெற்ற 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் ஆக மொத்தம் 32 நபர்களுக்கு (இளநிலை உதவியாளர் உடன் தட்டச்சர் பணியிடம் -1, தேர்ச்சி திறன் உதவியாளர் -1, சுகாதார பணியாளர்கள் -30) கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், காவல் ஆணையாளர் கே.பெரியய்யா, துணை ஆணையாளர் ப.காந்திமதி , உதவி ஆணையாளர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், உதவி ஆணையாளர் (கணக்கு) சுந்தர்ராஜ், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், செயற்பொறியளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...