தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.
கோவை, ஜனவரி 6
தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.
குற்றத்தடுப்பு, கொள்ளை போன பொருட்கள் மீட்கப்படுதல், சுகாதாரம் மற்றும் மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றை சிறப்பாக மேலாண்மை செய்யும் காவல் நிலையங்களுக்கு விருது வழங்க இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த விருதுக்காக இந்தியாவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை காவல்துறை வளர்ச்சி மையம் பட்டியலிட்டது.
இதற்காக தமிழக அரசின் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது இன்று வழங்கப்பட்டது.
அதில், முதல் பரிசை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றுள்ளது. இந்த விருதினை அக்காவல்நிலைய ஆய்வாளருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கி கவுரவித்தார். 2-ம் இடத்தை தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா காவல்நிலையமும், 3-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குடும்பா காவல்நிலையமும் பிடித்தது.