கோவை விழா கொண்டாட்டத்தில் வண்ணமயமான ஓவியக் கண்காட்சி

கோவை, ஜனவரி 06

கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் 10-வது ஆண்டு கோவை விழா- 2018 கோவையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று யங் இந்தியன்ஸ், கோவை ஆர்ட் பவுண்டேஷன் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் திட்டச்சாலையில் கண்கவர் ஓவியக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் ஏராளமான ஓவியர்கள் பங்கேற்று தங்களுடைய ஓவியங்களைப் பொதுமக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர். ஓவியச் சந்தையின் நுழைவாயிலில் பலவண்ண குடைகளின் மேற்கூரை அலங்காரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.



கோவையைச் சேர்ந்த ஓவியர் மோகன்ராஜ் இதுகுறித்து கூறுகையில், "20 ஆண்டுகளாக ஓவியங்களை வரைந்து வருகிறேன். ஆயில் பெயிண்ட், அகர்லிக் பெயிண்ட் மூலமாக விதவிதமான ஓவியங்களை வரைந்து வருகிறேன். சிறுவயதிலேயே ஓவியங்களை வரைவதில் ஆர்வம் எனக்குள் உண்டானது. இதுவரை ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளேன். இயற்கை காட்சிகள், பிரபல தலைவர்கள், நமது பண்பாடு, பாரம்பரியத்தை விளக்கும் படங்கள் வரைந்துள்ளேன்.

ஓவியர்கள் அதிக அளவில் உருவாக வேண்டும். இந்தக் கலை வளர இளம் ஓவியர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.



சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பென்சில் ஓவியர் நாக திவ்யா கூறும்போது:- "ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. என்னுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து வருகிறேன். இதற்காக எந்தவித பயிற்சிக்கும் செல்லவில்லை. தானாகவே ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டேன்.

பென்சில் மூலமாக ஓவியங்களை கருப்பு, வெள்ளை மற்றும் வண்ண ஓவியங்களை வரைந்து வருகிறேன். இணையதளத்தில் புதிய, புதிய மடல்களைப் பார்த்து அதைப்போலவே வரைவேன். ஓவியம் வரைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிகம் ஆர்வம் காட்டி வருகிறேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், டிஜிட்டல் ஓவியங்களின் வருகையால் ஓவியக்கலை கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. இக்கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஓவியக்கலையைப் பெரும்பாலும் யாரும் ஊக்குவிப்பது இல்லை. ஓவியர்களையும், அவர்கள் வரையும் ஓவியங்களையும் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...