வால்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகள் அட்டகாசம் : ரேசன் கடைகள் உடைப்பு

கோவை, ஜனவரி 05

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தின. மேலும், கடையினுள் இருந்த ரேஷன் பொருட்களையும் சூறையாடின.



வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா முதல்பிரிவில் நேற்று நள்ளிரவு புகுந்த 13 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ரேசன் கடையை சூறையாடியது. ரேசன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்த காட்டு யானைகள் உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு போன்றவற்றை சேதப்படுத்தியது. அப்பகுதியில் சுதாகர் என்பர் நடத்தி வரும் கடையையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

இதே போன்று அதிகாலையில் ஐயர்பாடி ரோப்பமட்டம் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியில் கோபால் என்பவர் நடத்தி வந்த கடையை சூறையாடி உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. 

தொடர்ந்து காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வனத்துறையினர் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினாலும் அவை அப்பகுதியிலே முகாமிட்டுள்ளது. உபாசி, பன்னிமேடு, பழைய வால்பாறை போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...