போராட்டத்தைத் தொடர்ந்தால், நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது : போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்சரிக்கை

ஜனவரி 05

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால். நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைமைச்செயலகத்தில் அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:  பொதுமக்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஊழியர்கள் அனைவரும் அமைதியான முறையில் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றே ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ததால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு கூறினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...