வரும் 7-ம் தேதி ”சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்” என்ற சிறப்பு கருத்தரங்கம்

கோவை, ஜனவரி 05

சுற்றுச்சூழல், நதிநீர், வனவிலங்கு, பாதுகாப்பு பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கோவையில் சிறப்பு கருத்தரங்கம் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது. 

கோவை மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. சமீப காலமாக நகரத்திற்குள்ளேயே வனவிலங்குகள் வழிமாறி வந்து கொண்டிருக்கிறன. மத்திய, மாநில அரசுகளின் ஆசியோடு நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறன. 

இதன் ஒருபகுதியாக கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை மஹாலில் வரும் 7-ம் தேதி (ஞாயிறன்று) சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி அலி, உ. வாசுகி மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம், பியூஸ்மனுஸ், ஓசை காளிதாஸ் மற்றும் சமூக இயக்கங்களான மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மாநில தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்கு துவங்கும் இக்கருத்தரங்கம் மதியம் வரை நடைபெற உள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...