நீலகிரி, ஜனவரி 05
கோத்தகிரி பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக்கு சுருக்கு கயிறு வைத்து கொன்றவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று சிறுத்தை ஒன்று மர்மமாக உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய வனச்சரகர் சீனிவாசன், கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் இறந்து போனது 7 வயது மதிக்கத்தக்கப் பெண் சிறுத்தை எனவும், சுருக்கு வைத்து கொன்றதையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கப்பிள்ளை என்பவரது மகன் ராஜன் (40) என்பவரிடம் நடத்திய விசாரணையில் சிறுத்தையை சுருக்கு வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர், இது குறித்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தற்போது நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார். அதில், ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
கோத்தகிரி பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக்கு சுருக்கு கயிறு வைத்து கொன்றவருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று சிறுத்தை ஒன்று மர்மமாக உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய வனச்சரகர் சீனிவாசன், கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் இறந்து போனது 7 வயது மதிக்கத்தக்கப் பெண் சிறுத்தை எனவும், சுருக்கு வைத்து கொன்றதையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கப்பிள்ளை என்பவரது மகன் ராஜன் (40) என்பவரிடம் நடத்திய விசாரணையில் சிறுத்தையை சுருக்கு வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். பின்னர், இது குறித்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தற்போது நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு வழங்கினார். அதில், ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.