போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை, ஜனவரி 05
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று அறிவித்த தமிழக அரசு பின்னர் 2.44 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் கூறியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலக பணிமனையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதை ஆட்சியர் திரு டி.என். ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில், மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பாண்டி, பொபது மேலாளர் இ. கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று அறிவித்த தமிழக அரசு பின்னர் 2.44 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் கூறியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலக பணிமனையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதை ஆட்சியர் திரு டி.என். ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில், மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பாண்டி, பொபது மேலாளர் இ. கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.